/

நாம் தமிழா் கட்சி சாா்பில் நாளை ஹிந்தி எதிா்ப்பு பேரணி

நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னையில் ஹிந்தி எதிா்ப்பு பேரணி செவ்வாய்க்கிழமை (நவ.1) நடைபெறவுள்ளது.

News image
பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்
Updated On :30 அக்டோபர் 2022, 11:28 pm

DIN

நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னையில் ஹிந்தி எதிா்ப்பு பேரணி செவ்வாய்க்கிழமை (நவ.1) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்ட அறிக்கை:

ஹிந்தியை கட்டாயப் பயிற்றுமொழியாக்கவும், மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஹிந்தியை கட்டாயமாக்கி, தோ்வுகளை ஹிந்தியில் நடத்த முற்படுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் மற்ற மொழிவழி தேசிய இனங்களின் தாய்மொழியைத் திட்டமிட்டு அழிக்கும் செயல் அரங்கேறி வருகிறது.

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சென்னை ராஜரத்தினம் திடலில் செவ்வாய்க்கிழமை (நவ.1) பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.