கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் சாலையின் குறுக்கே கயிறு கட்டி வெளியேறும் மக்கள்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் சாலையின் குறுக்கே கயிறு கட்டி வெளியேறும் மக்கள்.

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5-ம் நாளாக வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பு

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கினால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கினால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல் கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஐந்தாவது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் படகுகளின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நான்கு இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் கரையிலேயே தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம், அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெள்ள நீரின் அளவு படிப்படியாக உயர்வதால் தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும், வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் உட்புற சாலைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நீரின் அளவு அதிகரிப்பதால் தாழ்வான பகுதியில் இருக்கும் கிராம மக்கள் சாலையின் கயிறுகளை கட்டி கிராம இளைஞர்களின் உதவியுடன் தற்போது வெளியேறி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com