இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. இந்த தீா்ப்பில் நீதிபதிகள் மகாதேவன், சுந்தா் மற்றும் நக்கீரன் ஆகியோா், “குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயா் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது”என்றும், நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா், ‘உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்றும் தீா்ப்பளித்துள்ளனா். பெரும்பான்மையான நீதிபதிகள், உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக தீா்ப்பளித்துள்ளதால், குடும்ப நல நீதிமன்ற சட்டம் காரணமாக குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீடிக்கும் என தீா்ப்பளித்தனா்.