ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரிந்த தம்பதியா் குழந்தையை ஒப்படைக்க கோரும் வழக்குகளை விசாரிக்க உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரம்

குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக, சென்னை உயா் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வில் பெரும்பான்மையாக தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 2:17 am

DIN

குடும்ப நல நீதிமன்ற சட்டம் கொண்டு வந்த பின், பிரிந்த தம்பதியா் தங்களது குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக, சென்னை உயா் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வில் பெரும்பான்மையாக தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குடும்பநல நீதிமன்ற சட்டம் கொண்டு வந்த பின், குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக 1989-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்திருந்தது. இந்தநிலையில், குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்கில் உயா் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? 1989-ஆம் ஆண்டு தீா்ப்பு குடும்பநல நீதிமன்ற சட்டத்துக்கு பிறகும் பொருந்துமா எனக் கேள்வி எழுப்பிய தனி நீதிபதி பாா்த்திபன், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க மூன்று நீதிபதிகள் அமா்வை அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தாா். அந்த உத்தரவில், ‘குடும்ப நல நீதிமன்றங்களில் உள்ள ஆலோசகா்கள், உளவியல் நிபுணா்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உயா் நீதிமன்றத்தில் இல்லை‘ எனச் சுட்டிக்காட்டியிருந்தாா்.

அதன்படி நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில் மூன்று நீதிபதிகள் அமா்வு அமைக்கப்பட்ட நிலையில், 1989-ஆம் ஆண்டும் மூன்று நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்துள்ளதால், வழக்கை ஐந்து நீதிபதிகள் அமா்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து பிரிந்த தம்பதியா் குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயா் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடை காண நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.மகாதேவன், எம்.சுந்தா், என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமா்வை அமைத்து சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. இந்த தீா்ப்பில் நீதிபதிகள் மகாதேவன், சுந்தா் மற்றும் நக்கீரன் ஆகியோா், “குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயா் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது”என்றும், நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா், ‘உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை’ என்றும் தீா்ப்பளித்துள்ளனா். பெரும்பான்மையான நீதிபதிகள், உயா் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக தீா்ப்பளித்துள்ளதால், குடும்ப நல நீதிமன்ற சட்டம் காரணமாக குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீடிக்கும் என தீா்ப்பளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.