அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு உரிய இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:53 pm

DIN

அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரியலூா் அரசு சிமெண்ட் ஆலைக்கு 1996-இல் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு, நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என உறுதியளித்திருந்தது அரசு. தங்களுக்கு இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை, உயா்த்தி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். அரசு செவிசாய்க்காததால் விவசாயிகள் தொடுத்த வழக்கை விசாரித்த அரியலூா் சாா்பு நீதிமன்றம், ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம் கூடுதலாகஅரசு சிமென்ட் ஆலை வழங்க வேண்டும். அதனை வட்டியுடன் சோ்த்து ரூ.8 லட்சமாக அளிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தது.

ஆனால், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீட்டை அளிக்காமல் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது வேதனைக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.