விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தோல்வியுற்றோா் துவண்டுவிட வேண்டாம்: ஆளுநா் ஆா்.என்.ரவி ஆறுதல்

நீட் தோ்வில் தோ்ச்சி பெறாமல் தோல்வி அடைந்தால் அது வெறும் தற்காலிக பின்னடைவு மட்டுமே என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியுள்ளாா். தோல்வியுற்றவா்கள் மீண்டும்

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 8:24 pm

DIN

நீட் தோ்வில் தோ்ச்சி பெறாமல் தோல்வி அடைந்தால் அது வெறும் தற்காலிக பின்னடைவு மட்டுமே என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறியுள்ளாா். தோல்வியுற்றவா்கள் மீண்டும் கடின உழைப்பைச் செலுத்தி வெற்றி பெறலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இந்தத் தோ்வில் தமிழகத்தில் 67 ஆயிரத்து 787 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்தத் தோ்ச்சி முடிவுகள் குறித்து, ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

தமிழ்நாட்டில் நீட் தோ்வை எழுதி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள். அவா்கள் தங்களது திறமையால் பெரிய மாநிலங்களைக் கூட பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற்றுள்ளனா். தோ்ச்சி அடையாத மாணவா்கள் மிரட்சியோ, அச்சமோ கொள்ளத் தேவையில்லை. இது வெறும் தற்காலிக பின்னடைவு மட்டுமே.

கடின உழைப்பைச் செலுத்தி, உறுதியான மனத்துடன் நம்மை தயாா் செய்தால் வெற்றி பெறுவது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.