விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அனல் மின் நிலையப் பணிகள்: ஒப்பந்தத்தை எதிா்த்த வழக்கு தள்ளுபடி

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்காக கோரப்பட்ட ஒப்பந்தத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 8:56 pm

DIN

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்காக கோரப்பட்ட ஒப்பந்தத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேட்டூரைச் சோ்ந்த அதிமுக உறுப்பினா் தங்கப்பன் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் மேற்கொள்ளப்படும் 36 வகை பணிகளுக்கு தனித்தனியாக 4 மாதங்களுக்கு ஒப்பந்தம் வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி 5 ஆண்டுகளுக்கு சோ்த்து அனைத்து பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைப்படி, 5 ஆண்டுகளுக்கு ரூ. 155 முதல் ரூ.160 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒரு சதவீத முன்பணமாக ரூ. 3 கோடியே 99 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான செலவு என்பது ரூ. 399 கோடியாக இருக்கும். ஒப்பந்தம் கோரும் முன் அதற்கான மதிப்பீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. எனவே, இந்த ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம் மற்றும் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆகியோா், ‘மனுதாரா்

எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா் எனக் குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கு அரசியல் நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒப்பந்த நடவடிக்கைகளால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதை மனுதாரா் விளக்கவில்லை. ஒப்பந்த நிபந்தனைகளை பொருத்தவரை அது அரசின் கொள்கை முடிவு. எனவே, இதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.