தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமைச்சர் கே.என். நேரு மீதான வழக்கு ரத்து

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர் கே.என். நேரு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

News image

அமைச்சர் கே.என். நேரு மீதான வழக்கு ரத்து

Updated On :10 செப்டம்பர் 2022, 9:29 am

DIN


சென்னை: அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர் கே.என். நேரு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கே.என். நேரு பேசியதாக கோவை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கே.என். நேரு பேசியது, வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இல்லை என்று கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.