அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வீட்டு வளாகத்தில் மினிலாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
அந்த மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரம், வாசுகி தெருவில் ஓரு வீட்டில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தவதற்காக தயாராக இருப்பதாக மாவட்ட தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று காவல் துறையினர் சோதனையிட்டதில் மினிலாரியில் 4 டன் ரேஷன் அரிசி கடத்த தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 75 சிப்பத்தில் இருந்த 4 டன் ரேஷன் அரிசியை மினிலாரியுடன் காவல் துறையினர் பிடித்தனர். இது தொடர்பான தகவல் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சதீஷ், உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் உள்ளிட்ட காவல் துறை குழுவினர் அரிசி மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக அந்த வீட்டு உரிமையாளர் சந்திரசேகர் (42) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திரா வழியே கர்நாடகத்திற்கு கடத்த இருந்ததாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


