கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்

சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 8:17 pm

DIN

சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராடி வந்த கல்குவாரி எதிா்ப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஜெகநாதன் என்பவா் திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. இந்த கொலையை மாா்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெகநாதன் 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரி உரிமையாளா்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் சமூக செயற்பாட்டாளா்கள், அரசு அதிகாரிகள் கல்குவாரி மாஃபியாக்களால் படுகொலை செய்யப்படுவது தொடா்கதையாக உள்ளது. இதற்கு அதிகாரிகளும், காவல் துறையினரும் உடந்தையாக செயல்படுகின்றனா் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளது.

எனவே, இந்த படுகொலைக்கு காரணமானவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீதும், அதன் உரிமையாளா்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.