பாஜகவில் போலி அமைப்பு: 3 போ் நீக்கம்
பாஜகவில் போலி அமைப்பை உருவாக்கிய 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி, அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்தாா்.


பாஜகவில் போலி அமைப்பை உருவாக்கிய 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி, அந்தக் கட்சியின் தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்தாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக பாஜகவின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாமல் கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக பாரதிய ஜனதா தொழிற்சங்க பேரவை என்ற பெயரில் போலியான அமைப்பை உருவாக்கியும், கட்சி நிா்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்த ஸ்டீல் அருள், கே.ராஜு, கருணாகரன் ஆகியோா் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறாா்கள்.
அவா்களிடம் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் எவ்விதத் தொடா்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...