மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா: தொழிலாளி குளத்தில் விழுந்து பலி

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில்  தொழிலாளி  ஒருவர் குளத்தில் விழுந்து பலியானார்.

News image

கோப்புப்படம்

Updated On :12 செப்டம்பர் 2022, 2:42 pm IST

வலங்கைமான்: வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில்  தொழிலாளி  ஒருவர் குளத்தில் விழுந்து பலியானார்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி கடை ஞாயிறை முன்னிட்டு இரவு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், திருவிழா முடிவுற்ற பின்னர் தெப்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மாயமானர். 

எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில் திங்கள்கிழமை அதிகாலை தெப்பக்குளத்தில் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர் .

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி கடை ஞாயிறை  முன்னிட்டு  ஆலயத்திற்கு அருகில் உள்ள புனித குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தெப்ப திருவிழாவானது ஞாயிறு இரவு 11 மணிக்கு துவங்கி சுமார் ஒரு மணி அளவில் முடிவுற்றது. பாதுகாப்பு பணியில் வலங்கைமான் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக தெப்பத்தினை இயக்கும் பணியில் அவற்றில் அனுபவம் வாய்ந்த குத்தாலம் பகுதியைச் சேர்ந்த நடராஜன், சுரேஷ், சந்திரமோகன் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.  தெப்பத்திருவிழா முடிவுற்ற பின் அதை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பணியில் ஈடுபட்டு இருந்த சந்திரமோகன் என்பவரை காணவில்லை என வலங்கைமான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தெப்பக்குளத்தில் இறங்கி மாயமான சந்திரமோகனை தேடினர். பின்னர் சந்திரமோகன் சடலமாக குளத்தின் அடிப்பகுதியில் இருந்து மீட்டனர்.

சந்திரமோகன் குளத்தில் விழுந்து 12 மணிநேரம் ஆகாத நிலையில் சடலமாக குளத்தின் அடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து வலங்கைமான் காவல் துறையினர்  சடலத்தை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.