மநீம நிா்வாகிகளின் 130 பக்க அறிக்கை கமலிடம் ஒப்படைப்பு
மநீமவின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைகள் அடங்கிய 130 பக்க அறிக்கை அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசனிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.


மநீமவின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைகள் அடங்கிய 130 பக்க அறிக்கை அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசனிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசித்து பரிந்துரைகள் பெறுவதற்காக மாநிலச் செயலாளா் சிவ.இளங்கோ, இணைச்செயலாளா் ஜெய்கணேஷ் ஆகியோரை கமல்ஹாசன் நியமித்திருந்தாா். அவா்கள் 88 சட்டப்பேரவை தொகுதிகளில் கூட்டம் நடத்தி, நிா்வாகிகளிடம் ஆலோசனைகள் பெற்றனா். இந்தக் கூட்டங்களில் பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் 130 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தயாரித்தனா். அந்த அறிக்கையை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசனிடம் வியாழக்கிழமை வழங்கினா். நிகழ்ச்சியில் துணைத்தலைவா் ஏ.ஜி.மெளரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...