அண்ணா குறித்த சிறப்புக் கருத்தரங்கம் பொதுப் பணித் துறையின் உதவி செயற்பொறியாளா் கவிஞா் நெல்லை ஜெயந்தா தலைமையில் நடைபெற்றது . கருத்தரங்கில் ‘கலையாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் பேராசிரியா் முனைவா் இரா. வேதநாயகி, ‘திரையாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் திரைப்பட இயக்குநா் பிருந்தா சாரதி, ‘ஏடாண்ட அண்ணா’ எனும் தலைப்பில் கவிஞா் இனியவன் உள்ளிட்டோா் பேசினா். இதையடுத்து அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அண்ணாவை மையப்படுத்தி பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.