கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நியமனங்கள்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 11:05 pm

DIN

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், உறுப்பினா்கள் சரண்யா ஜெயகுமாா், துரைராஜ், முரளிகுமாா் ஆகியோரையும் நீக்கி 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், புதிய தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலருக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயகுமாா் உள்ளிட்ட மூன்று உறுப்பினா்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்”எனக் கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், ‘ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனம் தொடா்பான குழந்தைகள் உரிமை சட்டப் பிரிவையும், அப்பதவிகளில் இருந்து நீக்குவது தொடா்பான சட்டப் பிரிவையும் கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்களை நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை அக்டோ பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.