தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தனியார் நிறுவனத்திற்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தனியார் நிறுவனத்திற்கு சென்று ஊழியர்களை மிரட்டிய விவகாரத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
தனியார் நிறுவனத்தில் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா
Updated On :22 செப்டம்பர் 2022, 3:22 am

DIN

தனியார் நிறுவனத்திற்கு சென்று ஊழியர்களை மிரட்டிய விவகாரத்தில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தனியார் கார் உதிரிபாகம் தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்திற்கு சென்ற தாம்பரம் எம்எல்ஏவும், திமுக மாவட்ட நிர்வாகியுமான ராஜா, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது மிரட்டல் விடுத்துள்ளார். இந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.