அண்ணா பிறந்தநாள்: 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
அண்ணா பிறந்தநாள்: 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை
Published on
Updated on
1 min read

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசாலும் திமுகவினராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

புழல் மத்திய சிறையில் இருந்து 13 பேர், வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து 5 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து ஒருவர், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேர், திருச்சி மத்திய சிறையில் இருந்து 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அதுபோல மதுரை மத்திய சிறையில் இருந்து 22 பேரும் திருச்சி பெண் சிறையில் இருந்து 2 பேரும் புழல் பெண் சிறையில் இருந்து 2 பேரும் புதுக்கோட்டை சிறையில் இருந்து 4 பேரும் என 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com