தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,53,351-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா 4வது அலைக்கு வழிவகுக்காது: ஆராய்ச்சியாளர்கள்
கடந்த 24 மணி ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,083-ஆக உயர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.