சென்னையில் காந்தி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 
சென்னையில் காந்தி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 

நாட்டின் சுதந்திர நாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 

இதையடுத்து சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையினை திறந்துவைத்தார். 

பின்னர் காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி தமிழகம் வந்தபோது மேலாடையை துறந்த நிகழ்வினை நினைவுகூரும் பொருட்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து விடுதலை போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட அருங்காட்சியகத்தை திறந்துவைத்து பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com