சென்னை: விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயகாந்த் நாளை தலைமைக் கழகம் வருகை தர இருப்பதாகவும், விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, தொண்டர்கள் நாளை நேரில் அவரை சந்திக்க வரலாம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: மற்றுமொரு பிறழ்சாட்சி
விஜயகாந்த்துக்கு உடல்நிலை பிரச்னையால் சோர்வே தவிர, அவர் நலமுடன் தங்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.