2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கோரிய மனு தள்ளுபடி
Updated On :2 பிப்ரவரி 2022, 9:00 am

DIN


மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இரண்டு ஆண்டுகளுக்கு ரமேஷ் வழக்குத் தொடரவும் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கக் கோரிய கே.கே. ரமேஷின் மனுவும்  தள்ளுபடி செய்யப்பட்டது.

பொது நல வழக்குகளை முறையாகத் தாக்கல் செய்ய வில்லை. விளம்பரத்துக்காக பொது நல வழக்குகள் தொடரப்படுவதாகக் கூறி ரமேஷுகு 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.