சென்னை: அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக தற்போது வரை உள்ளதாக ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் பெயரில் உள்ள 3 கணக்குகள், அதிமுக தலைமைக் கழக கட்டட நிதி கணக்கு ஆகியவற்றை முடக்க கோரிக்கைவும், 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாம்தான் அதிமுக பொருளாளர் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: எட்டுக்குடி முருகன் கோயில்: ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு
சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ் நியமித்துள்ளார். தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை ரிசர்வ் வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல் தரவேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.