அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க ஆர்பிஐ-க்கு ஓபிஎஸ் கடிதம்

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக தற்போது வரை உள்ளதாக ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் பெயரில் உள்ள 3 கணக்குகள், அதிமுக தலைமைக் கழக கட்டட நிதி கணக்கு ஆகியவற்றை முடக்க கோரிக்கைவும், 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாம்தான் அதிமுக பொருளாளர் என குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ் நியமித்துள்ளார். தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை ரிசர்வ் வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல் தரவேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com