தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியறுத்த ஆளுநரை முதல்வர் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நிர்வாக ரீதியாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு குறித்தும் பேசலாம் என்றும் தமிழக சட்டப்பேரவையில் வருகிற 18 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறித்தும் பேசப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.