தமிழ்நாட்டில் புதிதாக 33 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 33 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,52,714 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | வேன் மோதி மாணவன் பலி: தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
மேலும் 61 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 34,14,323 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 366 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.