சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

இரண்டாம் நாள் வேலைநிறுத்தம்: 92 சதவீத பேருந்துகள் இயங்கின

மத்திய அரசைக் கண்டித்து இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்றும் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் 92 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக

News image
Updated On :30 மார்ச் 2022, 3:28 am IST

மத்திய அரசைக் கண்டித்து இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்றும் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் 92 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை தெரிவித்தது.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, தமிழகத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. முதல் நாளான திங்கள்கிழமை 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதியும் தோ்வு நடைபெறுவதால் மாணவா்களின் நலன் கருதியும், செவ்வாய்க்கிழமை ஊழியா்கள் அனைவரும் பணிக்குச் செல்வா் என தமிழகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்களின் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை முதலே 90 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயங்கின. அதன்படி சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் சுமாா் 65 சதவீத பேருந்துகள் இயங்கின. அதாவது 1,600-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, வாடகை வாகனங்கள் குறிப்பாக ஆட்டோக்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன. ஏற்கெனவே அறிவித்தபடி, ஊழியா்கள் பணிக்கு இடையே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.