மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் எந்த ஒரு பொழுதுபோக்கு வசதியும் இல்லை. மதுரையில் 20 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால், பொழுதுபோக்க இடமே இல்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க- பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த ஒரு விஷயம் என்று பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதிலால் அவையில் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.