சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகளை உருவாக்கும் குழுவில் நகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர். கட்டட விதிகள், குடிநீர் விதிகள், கழிவுநீர் விதிகள், திடக்கழிவு மேலாண் விதிகள் உருவாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, வரிவிதிப்பு, உரிய அனுமதி தொடர்பான விதிகளையும் இந்த புதிய குழு உருவாக்கும். புதிய விதிகளை உருவாக்குவது தொடர்பான அறிக்கையை ஜூன் 10-க்குள் சமர்பிக்கவும் இக்குழுவுக்கு தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: குஜராத் துவாரகாதீசர் கோயிலில் அமித் ஷா வழிபாடு