மதுரை - விழுப்புரம் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்: மதுரை ரயில்வே

மதுரை - விழுப்புரம் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மதுரை - விழுப்புரம் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சமயநல்லூர் அருகே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்ததால் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை மதுரை - திண்டுக்கல்  இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. எனவே மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையில் இருந்து இயக்கப்படும். 

அதே போல மதுரை - செகந்திராபாத் (கச்சிகுடா) வாராந்திர விரைவு ரயில் (07192) நவம்பர் 30 அன்று 45 நிமிடங்கள் தாமதமாக காலை 06.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனால் தற்போது மதுரை - கச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் நவம்பர் 30 அன்று மதுரையில் இருந்து வழக்கம் போல காலை 05.30 மணிக்கு புறப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவிபத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com