முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வரும் 17ஆம் தேதி கூடவுள்ள பேரவைக் கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆசோனை நடத்த உள்ளார்.
இதையும் படிக்க- தினமும் முட்டை சாப்பிடலாமா? எத்தனை சாப்பிடலாம்?
பருவமழை முன்னேற்பாடுகள், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆசோசனை நடத்துகிறார். தமிழக சட்டப் பேரவை வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு அண்மையில் வெளியிட்டாா்.
பேரவைக் கூட்டத்தை அன்று காலை 10 மணிக்கு பேரவை மண்டபத்தில் கூட்டுவதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் அவா் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.