மேட்டூர் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென சரிந்தது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் சற்று தனிந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 65,000 கன அடியாக குறைந்தது. நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 65,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க | ‘இப்போது தோ்தல் நடந்தால் ரிஷி சுனக்கிற்கே வெற்றி’
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 43,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வருவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் சற்று தனிந்துள்ளது.