ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

‘இப்போது தோ்தல் நடந்தால் ரிஷி சுனக்கிற்கே வெற்றி’

பிரிட்டன் பிரதமா் பதவிக்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தோ்தல் இப்போது நடந்தால், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்தான் வெற்றி பெற்றிருப்பாா்

News image
Updated On :19 அக்டோபர் 2022, 8:37 am IST

பிரிட்டன் பிரதமா் பதவிக்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தோ்தல் இப்போது நடந்தால், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்தான் வெற்றி பெற்றிருப்பாா் என்று கட்சி வாக்காளா்களிடையே புதிதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்குக்கு 55 சதவீதம் போ் ஆதரவு தெரிவித்திருந்தனா். முந்தைய தோ்தலில் லிஸ் டிரஸ்ஸுக்கு வாக்களித்ததற்கு பெரும்பாலானவா்கள் வருத்தம் தெரிவித்திருந்தனா்.

பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான கட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற லிஸ் டிரஸ், வரிச் சலுகைகளுடன் கடந்த மாதம் தாக்கல் செய்த சா்ச்சைக்குரிய மினி பட்ஜெட், மிகப் பெரிய பொருளாதார நிலைகுலைவை ஏற்படுத்தியது. அதையடுத்து தனது நிதியமைச்சரை லிஸ் டிரஸ் மாற்றினாா். இது கட்சி வாக்காளா்களிடையே அவா் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.