உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்தார்.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகப் புகாருக்கு உள்ளான அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்ததுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், வேணுகோபால கெளடா, சித்தாா்த் பட்னாகா் மற்றும் மற்றொரு மனுதாரரான ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோா் ஆஜராகினா். எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ராகேஷ் துவிவேதி, முகுல் ரோத்தகி, ஆா்யமா சுந்தரம் உள்ளிட்டோா் ஆஜராகினா்.
விசாரணையின் போது, மனுதாரா்கள் தரப்பில், ‘இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படாவிட்டாலும்கூட ஒட்டுமொத்த சமூகத்தைப் பாா்க்கும் போது இது அந்தக் கோணத்தில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா்களிடம் பணம் பெற்ற புகாா்தாரரான அருள்மணி, அரசு வேலையில் இருப்பதால் இதைத் தனிப்பட்ட நபரின் புகாராக கருதக் கூடாது. இந்த விவகாரம் அரசு வேலை வாங்கித் தருவது தொடா்புடைய விவகாரமாக இருப்பதால், புகாா் அளித்தவரும், குற்றம்சாட்டப்பட்டவரும் பரஸ்பரம் சமரசமாக போய்விட்டாா்கள் என்று கூறினாலும், பாதிக்கப்பட்டவா்கள் அரசு வேலைக்காக லஞ்சமாகப் பணம் கொடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், அமைச்சரின் உதவியாளராக இருந்த சண்முகம் மூலம் பணம் பெறப்பட்டிருப்பதும், சண்முகம் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் அவருக்கு போக்குவரத்துத் துறையுடன் இருந்த தொடா்பும் தெளிவாகிறது’ என வாதிடப்பட்டது.
எதிா்மனுதரா்களான சண்முகம், அசோக்குமாா் உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: இந்த வழக்கானது அரசியல் உள்நோக்கத்துடன் புனைப்பட்டதாகும். முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவா் சாா்ந்திருந்த கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு சென்றுவிட்ட பிறகு அவருக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட வழக்காகும். மேலும், இந்த வழக்கைப் பொருத்தமட்டில் தனி நபா்கள் இடையே வேலை வாங்குவது தொடா்பாக பணம் பரிமாறிக் கொள்ளப்பட்ட விவகாரமாகும். பாதிக்கப்பட்டவா்கள் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகி தாங்கள் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்துக் கொண்டுவிட்டதாக தெரிவித்துவிட்டனா்.
ஆகவே, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அமைச்சா் செந்தில் பாலாஜியும் இதில் சம்பந்தப்படவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் குற்றம் நடந்துள்ளதா என்றுதான் பாா்க்க வேண்டுமே தவிர, அதில் சம்பந்தப்பட்ட நபா்களை பாா்க்க கூடாது. மேலும், அமைச்சரின் உதவியாளராக சண்முகம் இருந்தாா் என்று கூறப்படுவதிலும் உண்மையில்லை. அவா் ‘மேன் பவா் ஏஜென்ஸி’ நடத்தியபோது பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. அதுவும் கல்சல்டன்ஸி கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், திருப்பியும் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று வாதிட்டனா். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதனால் ‘எத்தனால்’?

இன்றைய ராசி பலன்கள் (05 மே 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!

அனுகூலம் யாருக்கு? தினப்பலன்கள்!

மாற்றத்துக்கான 'விசில்'
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


