பல் பிடுங்கிய விவகாரம்: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை
அம்பாசமுத்திரம் பகுதியில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று விசாரணையைத் தொடங்கினர்


அம்பாசமுத்திரம் பகுதியில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இன்று விசாரணையைத் தொடங்கினர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி.-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலக ராணி நியமிக்கப்பட்டதையடுத்து அவர் அனைத்து கோப்புகளையும் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தற்போது சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜகுமார் நவராஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடையவியல் துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்
இங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள், ஆய்வாளர் அறை மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தினர். போட்டோ மற்றும் வீடியோ மூலமாகவும் அவர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...