திருச்சி மாநாட்டில் அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருச்சியில் நாளை மறுநாள்(ஏப்.24) ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டில் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என காவல் ஆணையரிடம் அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்துவோம் எனக் கூறிய நிலையில், அதிமுகவினர் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர்.
அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஓ. பன்னீா்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறாா். இந்த நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு நடத்தப்படவுள்ளது. எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாட்டை நடத்துவதாக அறிவித்துள்ளனா்.
இதற்காக, திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள ஜி.காா்னா் மைதானம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான மேடை மற்றும் பாா்வையாளா்கள் அமருவதற்கான பந்தல் அமைக்கும் பணி வியாழக்கிழமை அதிகாலை பூஜையுடன் தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரள தோ்தல்: சிபிஎம் வேட்பாளா்கள் அறிவிப்பு!தா்மடத்தில் முதல்வா் பினராயி போட்டி!
கடன் நெருக்கடியில் தமிழ்நாடு?

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!
அடகு நகையை மீட்டுத் தருவதாகக்கூறி 33 பவுன், ரூ.25 லட்சம் மோசடி செய்தவா் கைது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

