தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு தில்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்கிறார்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்ளிட்டோரை முதல்வர் சந்தித்து பேசவுள்ளார்.
கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை ஜூன் 3-ஆம் தேதி திறந்துவைக்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.