

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஆக. 22) காலை பரவலாக மழை பெய்தது.
சென்னையில் கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், கே.கே. நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் காலைமுதலே மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.