
சென்னை: விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி, கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவரான வினோதினி கணவரான அபிமன்னன், ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்னைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
இதையும் படிக்க | விராலிமலை அருகே சாலை விபத்து: 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி!
கருப்பசாமி மற்றும் அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோமதி சங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டிச்செல்வியின் கணவர்) உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.