டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்: விளக்கத்துடன் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பதற்கான காரணங்களை விளக்கி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.  
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்: விளக்கத்துடன் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பி வைப்பு!
Published on
Updated on
1 min read


சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பதற்கான காரணங்களை விளக்கி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.  

கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.

ஆளுநர் ஆர்.என். ரவி, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என கோப்புகளை திருப்பி அனுபினார்.

இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.

நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? யார் யார் விண்ணப்பித்தார்கள்? என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்ற நடைமுறைகள், டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிப்பதற்கான காரணங்களை விளக்கி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com