சென்னையில் பெய்த தொடர்மழையில் கட்டடச் சுவர் இடிந்து விபத்து - இருவர் உயிரிழப்பு!
சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால், கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


சென்னையில் ‘மிக்ஜம்’ புயலால் நேற்று நள்ளிரவு முதல், தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால், கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கானாத்தூர், ஈசிஆர் இந்திராகாந்தி தெருவில் புதியதாக கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், மழையில் நனைந்திருந்த கட்டடத்தின் ஒருபக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அதில், கட்டடத்தினுள் தங்கியிருந்த 20 வயதான ஜாகீர் மற்றும் 30 வயதான அப்ரோஸ் ஆகிய இரு இளைஞர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...