தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்: சென்னை, 6 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 8:09 am

DIN

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அதிகபட்சமாக ஆவடியில் 280 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, ஆந்திர கரையை நோக்கி நகர்ந்து நாளை காலை கரையைக் கடக்கவுள்ளது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.