தூத்துக்குடி: மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் (டிச. 5) மீன்வளத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு, விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என, மீன்வளத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபா் படகுகள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், புயலின் தாக்கம் குறையாததால், செவ்வாய்க்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை

அடுத்த ஒரு வாரத்திற்கு.. எந்த கோயிலில் என்ன விஷேசம்?
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



