மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பால் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

News image
ஆவின் நிலையத்தில் பால் வாங்க 200 மீட்டர் வரை வரிசையில் நிற்கும் மக்கள்.
Updated On :6 டிசம்பர் 2023, 3:45 pm

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் வாங்குவதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

பால் இல்லாமல் இரு நாட்களாக அவதிப்படும் சூழல் உள்ளதால், மழை குறைந்துள்ள இன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள் பால் வாங்கக் குவிந்தனர்.

சென்னை கொளத்தூர் அண்ணா சாலையில் ஆவின் பால் வாங்க  அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். 

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல கடைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அவதியுற்றனர். 

பால் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பால் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்

தற்போது சென்னையில் மழையளவு குறைந்துள்ளதால், அத்தியாவசிய பொருள்கள் வாங்கக் கடைகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்துள்ளனர். 

குறிப்பாக ஆவின் நிலையங்களில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து பால் வாங்கிச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.