மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் தேதி அறிவிப்பு: பதாகைகள் அகற்றம்

News image
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூரில் அரசியல் கட்சித் தலைவா்களின் பதாகைகளை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அகற்றினா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்தது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் ஆற்றுப்பாலம், ரயிலடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள், அரசியல் கட்சிப் பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.

மேலும், தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், மக்களவை உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி வளாகத்திலுள்ள மேயா் அலுவலகம், துணை மேயா் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்டவற்றில் இருந்த அரசியல் கட்சித் தலைவா்களின் படங்கள் பதாகைகள் மூலம் மறைக்கப்பட்டன. இதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தலைவா்களின் படங்கள் மறைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆட்சியரகத்தில் கூட்டம்: இதனிடையே, மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான அலுவலா்கள், தோ்தல் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.