சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை(டிச.15) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க | ‘ஆவினுக்கு 3.9 லட்சம் உற்பத்தியாளா்கள் பால் வழங்குகின்றனா்’
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் காலை முதல் மேகமூட்டமாக காணப்படுகிறது.