அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Published on
Updated on
1 min read


சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை(டிச.15) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகை, காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் காலை முதல் மேகமூட்டமாக காணப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com