நெல்லையில் தகவல் தொடர்பு சேவை பாதிப்பு!

நெல்லையில் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நெல்லையில் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பிஎஸ்என்எல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பிற செல்போன் நிறுவன சேவைகளும் சரிவர இயங்காததால் நெல்லையில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. 

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். நெல்லை சந்திப்பு பகுதியில் சிக்கி இருக்கும் பொது மக்களை படகுமூலம் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் பாதிக்கப்பட்ட உறவினர்களை தொடர்புகொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com