திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் பெய்து வரும் அதிகனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக தாமிரவருணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மீட்புப் பணிகளை தீவிரப் படுத்துவதற்காக முப்படைகளின் உதவிகளையும் தமிழக அரசு கேட்டுள்ளதாக இன்று காலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | தென் தமிழகத்தின் 19 ரயில்கள் ரத்து! முழு விவரம்
இந்த நிலையில், திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்துக்கு இன்று பிற்பகல் வருகை தந்த இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படவுள்ளது.
அதேபோல், சூலூர் விமானப் படை தளத்தில் இருந்தும் விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

