நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச. 19) விடுமுறை!

நெல்லை மாவட்டத்தில் நாளையும்(டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச. 19) விடுமுறை!

நெல்லை மாவட்டத்தில் நாளையும்(டிச.19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக நெல்லை மாநகர் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, நான்கு மாவட்டங்களிலும் இன்றும் (திங்கள்கிழமை) அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளையும்(டிச. 19, செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்டத்திற்கும் நாளை(டிச. 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com