தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை(டிச.19) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 19) விடுமுறை அளிக்கப்பட்டது.
வரலாறு காணாத மழையால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதையும் படிக்க: பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூருக்கான 9 ரயில்களின் சேவை திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. நெல்லையை மையமாகக் கொண்டு செயல்படும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.