இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்: ஆட்சியர் உத்தரவு

சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து புதன்கிழமை(டிச.20) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2023, 8:24 am

DIN


சேலம்: சேலம் பைத்தூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து புதன்கிழமை(டிச.20) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த  கலைச்செல்வி சிவக்குமார் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி பகுதியில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்திருப்பதாகவும்,அதேபோல்  ஆட்டுக்கொட்டகை அமைப்பதில் முறைகேடு செய்திருப்பதாகவும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில்  சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விசாரணை நடத்தப்பட்டதில் முறைகேடு செய்திருப்பது உறுதியானது.

இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து புதன்கிழமை(டிச.20) மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.

ஊராட்சி மன்ற தலைவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.