அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்திவைப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்திவைப்பு!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தாா். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 75 லட்சம் சொத்துகள் சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு அதாவது 64.90 % அளவுக்கு அமைச்சா் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளதால், இருவரும் குற்றவாளிகள் என்று  சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். 

இன்று தண்டனை அளிப்பதற்கு முன்னதாக அமைச்சர் பொன்முடி தரப்பில், வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இருப்பினும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 30 நாள்கள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

சொத்து குவித்து வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொன்முடி, அமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com