அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவிலுள்ள நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாள் இன்று (பிப். 3) அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினரின் அமைதிப்பேரணி நடைபெற்றது.
சென்னை வாலாஜா சாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் பேரணி மேற்கொண்டு அண்ணா நினைவிடத்திற்கு வந்தனர்.
அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணா நினைவிடத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். உடன் இருந்த மற்ற நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
இதில், துரைமுருகன், டி.ஆர். பாலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.